சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
1.111   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   அருத்தனை, அறவனை, அமுதனை, நீர்
பண் - வியாழக்குறிஞ்சி   (திருக்கடைமுடி (கீழையூர்) கடைமுடியீசுவரர் அபிராமியம்பிகை)
Audio: https://www.youtube.com/watch?v=-yJGrUCvJdM

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.111   அருத்தனை, அறவனை, அமுதனை, நீர்  
பண் - வியாழக்குறிஞ்சி   (திருத்தலம் திருக்கடைமுடி (கீழையூர்) ; (திருத்தலம் அருள்தரு அபிராமியம்பிகை உடனுறை அருள்மிகு கடைமுடியீசுவரர் திருவடிகள் போற்றி )
அருத்தனை, அறவனை, அமுதனை, நீர்
விருத்தனை, பாலனை, வினவுதிரேல்,
ஒருத்தனை, அல்லது இங்கு உலகம் ஏத்தும்
கருத்தவன், வள நகர் கடைமுடியே.

[1]
திரை பொரு திரு முடி திங்கள் விம்மும்
அரை பொரு புலி அதள் அடிகள் இடம்,
திரையொடு நுரை பொரு தெண் சுனை நீர்
கரை பொரு வள நகர் கடைமுடியே.

[2]
ஆல் இளமதியினொடு, அரவு, கங்கை,
கோல வெண் நீற்றனைத் தொழுது இறைஞ்சி,
ஏல நல்மலரொடு விரை கமழும்
காலன வள நகர் கடைமுடியே.

[3]
கொய் அணி நறுமலர்க் கொன்றை அம்தார்
மை அணி மிடறு உடை மறையவன் ஊர்,
பை அணி அரவொடு மான் மழுவாள்
கை அணிபவன் இடம் கடைமுடியே.

[4]
மறை அவன், உலகு அவன், மாயம் அவன்,
பிறையவன், புனல் அவன், அனலும் அவன்,
இறையவன் என உலகு ஏத்தும் கண்டம்-
கறையவன் வள நகர் கடைமுடியே.

[5]
பட அரவு ஏர் அல்குல் பல்வளைக்கை
மடவரலாளை ஒர்பாகம் வைத்து,
குடதிசை மதி அது சூடு சென்னிக்
கடவுள் தன் வள நகர் கடைமுடியே.

[6]
பொடி புல்கு மார்பினில் புரி புல்கு நூல்,
அடி புல்கு பைங்கழல், அடிகள் இடம்;
கொடி புல்கு மலரொடு குளிர் சுனை நீர்
கடி புல்கு வள நகர் கடைமுடியே.

[7]
நோதல் செய்து அரக்கனை, நோக்கு அழியச்
சாதல் செய்து, அவன், அடி சரண்! எனலும்,
ஆதரவு அருள் செய்த அடிகள் அவர்
காதல் செய் வள நகர் கடைமுடியே.

[8]
அடி முடி காண்கிலர் ஓர் இருவர்
புடை புல்கி, அருள்! என்று போற்று இசைப்ப,
சடை இடைப் புனல் வைத்த சதுரன் இடம்
கடை முடி; அதன் அயல் காவிரியே.

[9]
மண்ணுதல் பறித்தலும் மாயம் இவை;
எண்ணியகால், அவை இன்பம் அல்ல;
ஒண் நுதல் உமையை ஒர் பாகம் வைத்த
கண்ணுதல் வள நகர் கடைமுடியே.

[10]
பொன் திகழ் காவிரிப் பொரு புனல் சீர்
சென்று அடை கடைமுடிச் சிவன் அடியை
நன்று உணர் ஞானசம்பந்தன் சொன்ன
இன்தமிழ் இவை சொல, இன்பம் ஆமே.

[11]
Back to Top

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai list